டெல்லி காவல்துறை கலவரக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது" என்று குறிப்பிட்டார்

இந்த வீடியோ வெளிவந்த பிறகு, ட்விட்டரில் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த நபர் குறித்த சர்ச்சைகள் தொடங்கியது. இந்தக் கூட்டம் CAAவுக்கு ஆதரவாக போராட்டம் நிகழ்த்துவதாக சொல்லப்பட்டது. இந்த இளைஞனின் பின்னால் நிற்கும் கூட்டத்தின் கைகளில் காவி நிறக் கொடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்த டெல்லி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான், "டெல்லியில் பாஜகவை சேர்ந்தவர்கள் கலவரம் செய்கின்றனர். துப்பாக்கியால் சுடும் ஆளுக்கு நிச்சயமாக கபில் மிஸ்ரா மற்றும் பாஜகவுடன் உறவு இருக்கிறது. அதனால்தான் அவர் டெல்லி போலீசார் மீது துப்பாக்கியால் சுடுகிறார். டெல்லி காவல்துறை கலவரக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.


முகமது ஷாருக் CAA ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாரா? அவருக்குப் பின்னால் இருக்கும் கூட்டத்தின் கைகளில் காவி வண்ணக் கொடிகள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கான பதில்களை பிபிசி கண்டுபிடிக்க முயன்றது.