கொரோனா அச்சம் இல்லை: ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, டில்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்கள் கொரோனா குறித்து அச்சம் இல்லை எனத் தெரிவித்தனர்.

டில்லியில், கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த உடற்பயிற்சி கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்கள், அரசு உத்தரவின்படி மூடப்பட்டு உள்ளன. மேலும் மதம், சமூகம், கலை மற்றும் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தவும், 50 பேருக்கு மேல் மக்கள் ஒன்று கூடவும், மாநில அரசு தடை விதித்துள்ளது.