அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பது குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்

அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பது குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர்.இதையடுத்து, நிர்வாக குழுவில் உள்ள நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்; சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்தார். பின்னர், நேற்று மாலை, தலைமை நீதிபதி, மதுரை புறப்பட்டு சென்றார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அவசர வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது; 'நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும், இறுதி விசாரணைக்கு வரும் வழக்குகளை தள்ளி வைப்பது; நீதிமன்றம் வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகளை பரிசோதிப்பது என, முக்கிய முடிவுகள் குறித்து, இன்று அறிவிப்பு வெளியாகும். இந்த மாதம் முழுவதும், இதே நடைமுறையை அமல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. அதன்பின், நிலைமையை கவனித்து, அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.